News August 18, 2024
கலைஞர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை

கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதில் பங்கேற்கவில்லை. தனது சொந்த வேலைகளுக்காக வெளியூரில் உள்ளதால் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பதையும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி சார்பாக முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News July 5, 2025
சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணி தீவிரம்

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு ரூ.338 கோடி மதிப்பில் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆலந்தூர் வட்டம் மற்றும் சின்னம் பகுதிகளில் ரூ.9.4 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் உள்வாங்கி நீரோட்டச் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
News July 5, 2025
திருமணம் வரம் தரும் திரிசூலம் திரிபுரசுந்தரி

சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலநாதர் திருக்கோயில். இது ஒரு பழமையான சிவன் கோயிலாகும். நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால், இந்த மலைகள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News July 5, 2025
சென்னையில் இனிமேல் ஈசியா புகார் அளிக்கலாம்

சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க, புதிய Grievance Redressal System அமைத்துள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க 044-4567 4567 (20 லைன்கள்) என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1916 மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும் QR கோடு ஸ்கேன் செய்தும் புகார் பதிவு செய்யலாம்.