News April 8, 2025
கலெக்டர் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (ஏப்ரல் 7) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தனது மகளுடன் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர், போலி ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை அபகரிப்பதாக மனு கொடுக்க வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் மூதாட்டியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
Similar News
News December 1, 2025
காஞ்சிபுரம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
காஞ்சிபுரம்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 1, 2025
காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.


