News December 31, 2024
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.
Similar News
News September 13, 2025
காஞ்சிபுரம்: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர்-2
மேலும் விவரங்கள் அறிய & விண்ணப்பிக்க <
News September 13, 2025
காஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் இன்று (செப்.,13) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினா க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் இந்த முகாமை தொடங்கி வைத்தனர்.
News September 13, 2025
காஞ்சிபுரம்: திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, அண்ணா பிறந்தநாள் அன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் “ஆதிக்கச் சக்திகளின் முன்-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!” என்று உறுதிமொழி எடுப்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.