News December 31, 2024

கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.

Similar News

News November 15, 2025

யோகா பயிற்சியாளர் தேர்வுக்கு அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துவர்களுக்காக தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் / யோகா மற்றும் இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் சான்றிதழுடன் நவ.19-க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனுப்பவும்.

News November 15, 2025

காஞ்சிபுரம்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

image

காஞ்சிபுரம் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள்<> இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். * வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News November 15, 2025

காஞ்சிபுரத்தில் கனமழை எச்சரிக்கை!

image

வரும் நவ.16ம் தேதி முதல் தமிழ்க்த்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். காஞ்சிபுரம், சென்னை, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு & ஆரஞ்சு அலெர்ட் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!