News December 31, 2024

கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.

Similar News

News November 21, 2025

காஞ்சி: 7 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை!

image

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தை சேரந்தவர் ராணி (70) கடந்த 12ஆம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த சுங்குவார்சத்திரம் போலீசார், பாப்பாங்குலி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 7 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ய 4 மாதங்களாக திட்டமிட்டுள்ளார் என தெரியவந்தது.

News November 21, 2025

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

image

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 21.11.2025 அன்று 9.30 முதல் 3.00 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது!
தகுதி: 8-ம் வகுப்பு, 10th, 12th, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தை அணுகவும்.

News November 21, 2025

காஞ்சி: மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி!

image

காஞ்சிபுரம், படப்பை, துலகானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (50) இவர் நேற்று (நவ.20) ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது சங்கர் ஏரியில் மூழ்கி மாயமானார். அவரை மீட்க சென்ற ரஜினி, மாரிமுத்து ஆகியோரும் ஏரியின் நடுவில் சிக்க, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அவர்கள் சங்கர் உடலை மீட்டு இருவரையும் காப்பாற்றினார்.

error: Content is protected !!