News December 31, 2024
கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.
Similar News
News November 23, 2025
காஞ்சி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 24 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார், எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 23, 2025
காஞ்சி மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்

சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். QR குறியீடு உள்ள அனுமதி அட்டை பெற்ற 2,000 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர். இதற்காகக் கல்லூரியைச் சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பெண்கள் & விவசாயிகளுடன் விஜய் கலந்துரையாட உள்ளார்.


