News April 7, 2025

கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது 

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்  கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 16, 2025

திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளின் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பெறப்படும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை, பிற நபர்களுக்கு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக, பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 16, 2025

திருப்பூரில் வட மாநில வாலிபர்கள் கைது

image

திருப்பூர் வடக்கு காவல்நிலையை எல்லைக்கட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சோதனை செய்த போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரோஸ், சுசில் குமார் முக்கியா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சீட்டு கட்டு மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 15.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!