News April 7, 2025
கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய தம்பதி: அதிரடி கைது!

மூலனூர் பகுதியில் உள்ள கிராம கோவில்களில் உண்டியல் காணிக்கை, பூஜை பொருட்கள், பித்தளை தட்டுகள் திருட்டு போயின. இது தொடர்பாக கேமரா காட்சிகள் ஆய்வு செய்த போது திண்டுக்கல்லை சேர்ந்த பரமேஸ்வரன் (46), மனைவி விஜயலட்சுமி (35) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
News November 14, 2025
குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி: 17 ம் தேதி தொடங்குகிறது

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 2 மற்றும் குருப் 2 ஏ முதன்மை தோ்வுக்கான வகுப்புகள் வருகிற 17ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக அறை எண் 439ல் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள 0421 2999152 மற்றும் 9499055944 எண்ற எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.
News November 14, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் ஜெயபாலன் தலைமையில் கொங்கு நகர் மற்றும் அனுப்பர்பாளையம் சரகத்திலும், சேகர் மற்றும் ஜான் ஆகியோர் தலைமையில் நல்லூர் மற்றும் கே வி ஆர் நகர் சரகத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


