News April 7, 2025
கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
பல்லடம் அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

பல்லடம் அடுத்த, கரையாம்புதுாரை சேர்ந்தவர் நாச்சம்மாள் 78. இவரின் வீட்டுக்கு ஹோட்டலில் வேலை பார்க்கும் பிரபு தென்னை மட்டை எடுப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிரபு, அவரது நகைகளை பறிக்க திட்டமிட்டு, நண்பன் உசேன் முகமதுவை வரவழைத்தார். இருவரும் இணைந்து, 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 5, 2025
திருப்பூரில் அருமையான வாய்ப்பு DON’T MISS

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இன்று 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55944. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 4, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (04.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும், அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


