News May 16, 2024

கலசப்பாக்கம்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

image

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.09.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் சமூக நீதி உறுதிமொழியை ஏற்றனர். அனைவரும் சமூக நீதியை நிலைநாட்டவும், சாதி, மத, இன பாகுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் உறுதி பூண்டனர்.

News September 17, 2025

தி.மலையில் தீபாவளி பட்டாசு சில்லறை உரிமம் விண்ணப்பம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்ததாவது: இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு சில்லறை விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விரும்புவோர், அக்டோபர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பட்டாசு விற்பனையாளர்கள் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து சரியான நேரத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!