News April 4, 2025
கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 20, 2025
மதுரை: 143 கண்மாய்களுக்கு மீன்பாசி இ-டெண்டர் அறிவிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள 143 கண்மாய்களுக்கு மின்னணு மறு ஒப்பந்தப்புள்ளி (e-tender) வாயிலாக மீன்பாசி குத்தகை விடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், சிம்மக்கல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். *ஷேர்
News December 20, 2025
மதுரை கலெக்டர் அறிவிப்பு.!

மதுரை மாவட்டத்தில் 2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 21 நாட்களுக்கு அனைத்து கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 4 மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிட்டுள்ளார்.
News December 20, 2025
மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


