News April 4, 2025
கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 15, 2025
மதுரை அருகே திமுக நிகழ்ச்சியில் மூக்குடைப்பு

சோழவந்தான் அருகே பொம்பன்பட்டியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த ‘டிபன் கேரியர்’ வழங்கும் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு வாங்க முயற்சித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் பொம்மன்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் 42, என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
மதுரையில் வங்கி தேர்வு இலவச பயிற்சி

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே நேஷனல் இன்ஸ்டியூட் பயிற்சி மையத்தின் 21 ஆண்டை முன்னிட்டு கல்லூரியில் இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் 70 மாணவர்களுக்கு இலவச வங்கி தேர்வு பயிற்சி நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு டிச.21 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நேஷனல் இன்ஸ்டியூட்டில் நடைபெறும். முன்பதிவு செய்ய 95666 59104 வாட்ஸ் ஆப்பிள் முன்பதிவு செய்யலாம் முன்பதிவு செய்ய டிச.20 கடைசி நாள்.
News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


