News March 29, 2024

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

image

நாகர்கோவில் மேலராமன்புதூரை சோ்ந்த அசோக்(28), அயனிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அசோக்கிற்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதை மனைவி கண்டிக்கவே, நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கர்ப்பிண என பாராமல் அசோக் ராஜேஸ்வரிதை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அசோக்கை கைது செய்தனர்.

Similar News

News September 18, 2025

கன்னியாகுமரியில் ரூ.1085 கோடியில் திட்டம் தயார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாயை சீரமைக்க ரூ.1085 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தோவாளை கால்வாய் ரு.189 கோடி, அனந்தனார் கால்வாய் ரூ.186 கோடி, நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் ரூ.189 கோடி, பட்டணம் கால்வாய் ரூ.60 கோடி, திற்பரப்பு கால்வாய் ரூ.15 கோடியிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

News September 18, 2025

குமரியில் காய்ச்சல் காரணமாக மாணவி உயிரிழப்பு

image

குமரி மாவட்டம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜினி தெரசா(22). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 18, 2025

குமரி மாவட்ட எஸ்பி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வாகன சோதனையின் போது 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் ஓட்டி வந்த ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டது. அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!