News August 3, 2024

கர்ப்பிணி சிறுமி தற்கொலை; கணவர் மீது ‘போக்சோ’

image

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

Similar News

News December 4, 2025

தமிழ் திறனறித் தேர்வில் 71 மாணவர்கள் தேர்ச்சி

image

2025 – 26ம் கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஊக்கத் தொகை பெறுவதற்கான தேர்வு பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 71 மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.16 ஆயிரத்து 500 ஊக்கத் தொகை என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி 2, தியாகதுருகம் 32, விருகாவூர் 20, கச்சிராயபாளையம் 11.5, கோமுகி அணை 3, அரியலுார் 7, மாவட்டத்தில் சராசரியாக 17.35 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ., மழை பதிவாகியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

error: Content is protected !!