News October 24, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (19.12.2025, வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இக்கூட்டம் நடைபெறும். மேலும் இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.
News December 18, 2025
கிருஷ்ணகிரி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று டிச.18 பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
ஓசூர்: பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேற்று (டிச-17) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட சமூகநல அலுவலர் இரா. சக்தி சுபாசினி, முதன்மை மருத்துவ அலுவலர் மரு.லஷ்மிஸ்ரீ உள்ளிட்ட பலர் உள்ளனர்.


