News October 24, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
3 வயது குழந்தையுடன் தாய் மாயம்

கல்லாவி அடுத்த ஊமைகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தாமரை செல்வன். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 3 வயதில் இனியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தேன்மொழி தனது மகன் இனியனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாமரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 24, 2025
கிருஷ்ணகிரி: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <
News November 24, 2025
கிருஷ்ணகிரி: ரூ.15000 மானியம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு புதிய மின்மோட்டார் மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: சிட்டா, வரைபடம், ஜாதிச்சான்று, மார்பளவு புகைப்படம், ஆதார். மானியம் மின் மோட்டார் விலையின் ரூ.15000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 94430 83493 க்கு தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


