News October 24, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
கிருஷ்ணகிரி: சத்துணவு மையத்தில் 146 காலியிடங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சத்துணவு மையத்தில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <
News December 13, 2025
ஓசூர்: மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று(டிச-13) மற்றும் நாளை (டிச.14) மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்வானது நிர்வாக காரணங்களால் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேற்று(டிச.12) தகவல் தெரிவித்தார்.
News December 13, 2025
கிருஷ்ணகிரியில் வேலை வேண்டுமா..?

கிருஷ்ணகிரி அடுத்து ராயக்கோட்டை ரோடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று(டிச.13) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. 8 ,10,+2, ஐ டிஐ, டிகிரி,BE, நர்சிங், முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. (SHARE IT)


