News April 2, 2025

கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

image

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!

Similar News

News October 17, 2025

கரூர் : புதுமை தொழில் தொடங்க 10 லட்சம் மானியம்

image

கரூர் மாவட்டத்தில் Agri Start-up திட்டத்தின் கீழ் புதுமை தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் தொழிலை விரிவுபடுத்த விரும்புவோர் ரூ.10 முதல் ரூ.25 இலட்சம் வரை மானியமாக பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டு, தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

News October 17, 2025

கரூர்: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

கரூர் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை (அக்.18) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

அரவக்குறிச்சி: பைக்கில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா செம்பாறைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேலு (39). இவர் தனது பைக்கில் நேற்று செங்கல்பட்டி குறுக்கு சாலையில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி தமிழ்ச்செல்வி புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!