News March 19, 2024
கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 12, 2025
வெங்கமேடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்!

கரூர், வெங்கமேடு ரயில்வே பாதை அருகே வேப்ப மரத்தில் சுமார் 35 வயதுமிக்க இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதி விஏஓ பிரகாசுக்கு தெரிவிக்கப்பட்டு பிறகு பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் நேற்று கொலையா அல்லது தற்கொலையா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News December 12, 2025
கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
கரூர் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; இளைஞர் பலி

கரூர் வேலாயுதபாளையம் அருகே குட்டைக்கடை சாலையில் அபிஷேக் என்பவர் இயக்கிய ஆம்புலன்ஸ் வேகமாக சென்றபோது கட்டுப்பாடு இழந்து தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அபிஷேக், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலாயுதபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


