News March 19, 2024
கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 18, 2025
கரூரில் ஜவுளி பூங்காவை திறந்து வைத்து அமைச்சர்!

கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் உள்ள ஓயாசிஸ் ஜவுளிப்பூங்காவை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
கரூர் அருகே பெண் விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஆண்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (50). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனவிரக்த்தியில் சாணப்பவுடரை சாப்பிட்டுள்ளார். பின் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை!
News September 18, 2025
கரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

கரூர் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு B.E/B.Tech, M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <