News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

கரூர்: முன் விரோத தகராறில் அடி உதை!

image

கரூர்: நொய்யல் அருகே உள்ள சேமங்கி கிருஷ்ணா இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(74) – அருணா(72) ஆகியோரின் மகன் ரவி(46). இவருக்கும், இவரது சகோதரர் குணாளன்(50) என்பவருக்கும் ஓர் இடப் பிரச்னையால் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், இதன் காரணமாக ரவியை குணாளன் மற்றும் பெற்றோர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதில் ரவி காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News September 15, 2025

கரூரில் பைக் தடுமாறி சாலை விபத்து!

image

கரூர்: ஜெகதாபி அருகே ஆனந்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி (70) என்பவர், உப்பிடமங்கலம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி கமலா ராணி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

கரூர்: குளித்தலை அருகே பைக் மோதி நடந்து சென்றவர் காயம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி மாணவர் திருக்குமரன் (52) நேற்று ராஜேந்திரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது, பின் தொடர்ந்த தினேஷ் என்பவரின் பைக் மோதி, அவருக்கு இடது காலில் கடும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருக்குமரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உறவினர் பூங்கொடி புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!