News August 9, 2024

கரூர்: வயதான தம்பதியின் வீட்டை சுற்றி போட்ட முட்கள் அகற்றம்

image

கரூர் கிராயூர் கிராமத்தை சேர்ந்தர் சின்னசாமி. இந்நிலையில் வாங்கல் ஊராட்சி சார்பில் தார் சாலை அமைக்க 50 சென்ட் நிலத்தை கேட்டதற்கு சின்னசாமி தர மறுத்துள்ளார். இதனால் கடந்த ஏப்.3ம் தேதி சின்னசாமி வீட்டை சுற்றியும் முட்களை வெட்டி போட்டு வெளியே வராதவாறு தடுத்துள்ளனர்.அது குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர்களது வீட்டை சுற்றி போட்டிருந்த மூட்கள் அகற்றப்பட்டன.

Similar News

News November 23, 2025

கரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 23, 2025

தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடன் பெற அழைப்பு

image

கரூர், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். தகுதியும், ஆர்வமும் கொண்டவர்கள் போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விபரங்களுடன், www.msmeonline.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

News November 23, 2025

கரூரில் தட்டி தூக்கிய மதுவிலக்கு போலீசார்!

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நங்கவரம், லாலாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் மதுவிற்பனை குறித்து சோதனை செய்தனர். இதில் சட்ட விரோதமாக மது விற்ற புண்ணியமூர்த்தி (36), அன்னக்கிளி (60), நதியா 38 ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!