News March 19, 2024

கரூர்: ரூ.3,38,388 பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

image

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர், சின்னரெட்டியப்பட்டி , ஆர்.டி.மலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வேனில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.3,38,388 ரொக்க பணத்தை பறக்கும் படை அலுவலர் லலிதா தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 12, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கும் சொந்த வீடில்லா ஏழை குடியிருப்புவாசிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் பெற https://tnuhdb.tn.gov.in/webhome/dept_beneficiary_form.php என்ற இணையதளத்தில் நேரிலோ, இ-சேவை மையத்தின் மூலமாகவோ உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News December 12, 2025

கரூரில் சோகம்; ரயிலில் அடிபட்டு பெண் பலி

image

கரூர் மாவட்டம் வெங்கமேடு VPG நகர் ரயில்வே பாதையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

News December 12, 2025

கரூர்: ஆற்று மணல் மூட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!

image

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே லாலாபேட்டை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அரசு அனுமதி இன்றி மினி வேனில் ஆற்று மணலை மூட்டைகளாக கடத்தி வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்தலில் ஈடுபட்ட மேட்டு திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் பாலகுமார் (26) என்ற கொத்தனார் தொழிலாளி மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!