News January 1, 2025
கரூர்: முதியவர் ஹெல்மெட் விழிப்புணர்வு பயணம்

திருப்பூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (66), சமூக ஆர்வலர். கடந்த 2005 முதல் டூவீலரில் சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிசம்பர் 5ல் திருப்பூரில் விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்த சிவசுப்பிரமணி நேற்று கரூர் வந்தார். டிராபிக் போலீசார் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதிக்கு புறப்பட்டார்.
Similar News
News November 21, 2025
கரூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது இணையதளம் மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம்

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 சட்டமன்றத் தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள(4.11.2025) முதல் வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவ-22,23 தேதிகளில் காலை 8 முதல் மாலை 5 வரை SIR கணக்கெடுப்பு படிவம் புதிதாக வழங்கப்படும். தணிக்கையாளர் 2002–2005 பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் சிறப்பாக பரிசீலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
News November 21, 2025
கரூர்: இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெண்ணைமலையில் நடைபெறுகிறது. கல்வித்தகுதி 10ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பு உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். தொடர்புக்கு- 9499055912, 9360557145 அழைக்கலாம்.


