News January 1, 2025
கரூர்: முதியவர் ஹெல்மெட் விழிப்புணர்வு பயணம்

திருப்பூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (66), சமூக ஆர்வலர். கடந்த 2005 முதல் டூவீலரில் சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிசம்பர் 5ல் திருப்பூரில் விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்த சிவசுப்பிரமணி நேற்று கரூர் வந்தார். டிராபிக் போலீசார் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதிக்கு புறப்பட்டார்.
Similar News
News November 13, 2025
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (14.11.25) காலை 10 மணி அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
News November 13, 2025
ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கு பயிற்சி!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
கரூர்: விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் நவம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.


