News April 24, 2025
கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு விருது !

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
குளித்தலை அருகே சமையல் பாத்திரத்தில் விழுந்த சிறுமி பலி

குளித்தலை அருகே கொம்பாடிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் மகள் தமிழினி (03). இந்த சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டில் இருந்து தவறி சமையல் செய்து கொண்டிருந்த பாத்திரத்தில் விழுந்து உடல் முழுவதும் சுடுநீர் பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். மேலும் லாலாபேட்டை நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
தமிழக அளவில் மாஸ் காட்டிய கரூர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற72 ஆவது தமிழ்நாடு கபடி மாநில சாம்பியன் போட்டியில் காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், சேலம், திருச்சி, சென்னை, அனைத்து அணிகளையும் வென்று முதல் இடத்தை கரூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்து பட்டத்தை 30 ஆண்டுகள் பிறகு வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு அணியின் வீரர்களுக்கு மாவட்ட கபடி குழு சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்தனர். உங்களது வாழ்த்துகளை கமெண்ட் பண்ணுங்க
News December 5, 2025
பாலவிடுதி டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா வீரனம்பட்டியை சேர்ந்த ராசு மகன் முருகன் (51). இவர் பாலவிடுதி டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற முருகன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


