News April 24, 2025
கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு விருது !

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
JUST IN:கரூர் திமுக முப்பெரும் விழாவில் திடீர் மழை!

கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.இந்தநிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. இதனால், விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்.
News September 17, 2025
கரூரில் முதலமைச்சரை வரவேற்ற ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கரூருக்கு வருகை புரிந்தமைக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புத்தகத்தை வழங்கி வரவேற்பு செய்தார்.
News September 17, 2025
திமுக முப்பெரும் விருதுகள் பெறுபவர்கள் யார்?

கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியில் செப்டம்பர் 17 இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் பெரியார் விருது எம்.பி கனிமொழி, அண்ணா விருது திரு.சீத்தாராமன், கலைஞர் விருது சோ.மா ராமச்சந்திரன், பாரிவேந்தன் விருது குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கம் மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் பழனிச்சாமி ஆறு நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.