News April 24, 2025

கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு விருது !

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

கரூர்: வாக்களர் கவனத்திற்கு IMPORTANT

image

கரூர் மாவட்டம், 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்யில் கரூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. https://karur-electors.vercel.app/?tsc=AC152 இந்த இணையதளம் மூலமாக தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

News November 22, 2025

கரூரில் இந்த பகுதியெல்லாம் கரண்ட் இருக்காது!

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பசுபதிபாளையம், பாலம்பாள்புரம், ஒத்தக்கடை, வெள்ளியணை ஆகிய துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் பசுபதிபாளையம், வடக்கு பசுபதிபாளையம், ராமாகவுண்டனூர், கொளந்தா கொளந்தாகவுண்டனூர். ஆதிமாரியம்மன் கோவில் தெரு, சுங்ககேட், எஸ்.பி. காலனி, வாங்கப்பாளையம், வெள்ளியணை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News November 22, 2025

முதல் நிலைக் காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு

image

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன் 35 என்பவர் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், மேலும் அவரது நண்பருடன் அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!