News August 7, 2024
கரூர் மாவட்டத்தில் 72.60 மிலிமீட்டர் மழைப்பொழிவு

கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழையானது மொத்தம் 72.60 மில்லி மீட்டர் பெய்ததாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதில் அதிகபட்ச மழை பொழிவாக கிருஷ்ணராயபுரத்தில் 26.00 மிமீ, மாயனூரில் 28.40 மிமீ, மைலம்பட்டியில் 6.00 மிமீ, பாலவிடுதியில் 3.00 மிமீ மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
கரூர்: ஏலச்சீட்டு மோசடி வாலிபர் குண்டாஸில் கைது!

கரூர் மாவட்டம் கடவூர் செம்பியாநத்தம் நாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன்(34) ஏலச்சீட்டு நடத்தி 3 லட்சத்து, 30 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த ஆகஸ்டில் சிந்தாமணிப்பட்டி போலீசார் முருகேசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்பி பரிந்துரையின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் தங்கவேலு உத்தவிட்டார். இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார்.
News September 14, 2025
குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்த அபிமன்யுவின் மனைவி சுஷ்மிதா, நிறைமாத கர்ப்பிணியான இவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆண் குழந்தை பெற்றார். பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அபிமன்யு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
கரூர்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <