News August 7, 2024

கரூர் மாவட்டத்தில் 72.60 மிலிமீட்டர் மழைப்பொழிவு

image

கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழையானது மொத்தம் 72.60 மில்லி மீட்டர் பெய்ததாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதில் அதிகபட்ச மழை பொழிவாக கிருஷ்ணராயபுரத்தில் 26.00 மிமீ, மாயனூரில் 28.40 மிமீ, மைலம்பட்டியில் 6.00 மிமீ, பாலவிடுதியில் 3.00 மிமீ மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 24, 2025

கரூர் மக்களே மின்தடை அறிவிப்பு! உஷார்

image

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஒத்தகடை, அரவக்குறிச்சி, வெள்ளியணை, தாளப்பட்டி, வல்லம், அய்யர்மலை, தோகைமலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், காணியாளம்பட்டி, மாயனுர், கொசூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, பஞ்சப்பட்டி, கருங்கல்பட்டி, பாலம்பாளுபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க மக்களே!

News November 24, 2025

குளித்தலை: இந்து முன்னணி நகர துணை தலைவர் காலமானார்

image

கரூர் மாவட்ட குளித்தலை இந்து முன்னணி கரூர் நகர துனை தலைவர் தியாகராஜன் உடல் நலக் குறைவாக இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 8 மணி அளவில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பலரும் இறந்த தியாகராஜன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

News November 24, 2025

சிந்தாமணிப்பட்டி அருகே கொலை மிரட்டல்!

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு கடவூரில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தரகம்பட்டியில் இருந்த போது அங்கு வந்த கௌதமன் கார்த்திக் ராஜா மாணிக்கவாசகம் ஆகியோர் அவரை தகாத வார்த்தை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!