News April 1, 2025
கரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்.3-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
₹5,000 பரிசு: அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, டிச.2ல் பள்ளி, கல்லுாரி பேச்சு போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04324 – 255077 அழைக்கவும்.
News November 19, 2025
கரூரில் பாம்பு கடித்ததில் பெண் பலி!

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சென்னம்பட்டி பகுதியில் வசித்து வந்த வசந்தா என்பவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு கடித்தது. உடனடியாக, அவர் குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 18, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Service Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <


