News April 1, 2025
கரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்.3-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன்!

கரூர் தெற்கு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (62) மற்றும் அவரது மனைவி செல்வி (54) சொத்து பிரச்சனையை காரணமாக ஹரிகிருஷ்ணன் (47) மற்றும் அவரது மகன் கவின் (25) கடந்த 20-அன்று இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கனகராஜ் புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் ஹரிகிருஷ்ணன் மற்றும் கவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 22, 2025
கரூர்: பைக் மீது பேருந்து மோதி பலி

சென்னை நோக்கி பளளப்பட்டியில் புறப்பட்ட அரசு பேருந்து அரியலூர் ஓட்டுநர் முருகாநந்தம் ஓட்டியபோது, ரங்கராஜ்நகர் அருகே எதிர் திசை பைக் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(60) தீவிர காயமடைந்து தனியார் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 22, 2025
கரூர் கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் BLO வழங்கும் கணக்கெடுப்பு படிவத்தில் 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR -ல் உங்கள் விபரத்தை பார்த்து பூர்த்தி செய்ய கீழே உள்ள QR code ஜ ஸ்கேன் செய்யவும். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பும் அறிவித்துள்ளார்.


