News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
கரூர் மக்களே மின்தடை அறிவிப்பு! உஷார்

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஒத்தகடை, அரவக்குறிச்சி, வெள்ளியணை, தாளப்பட்டி, வல்லம், அய்யர்மலை, தோகைமலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், காணியாளம்பட்டி, மாயனுர், கொசூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, பஞ்சப்பட்டி, கருங்கல்பட்டி, பாலம்பாளுபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News November 24, 2025
குளித்தலை: இந்து முன்னணி நகர துணை தலைவர் காலமானார்

கரூர் மாவட்ட குளித்தலை இந்து முன்னணி கரூர் நகர துனை தலைவர் தியாகராஜன் உடல் நலக் குறைவாக இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 8 மணி அளவில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பலரும் இறந்த தியாகராஜன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
News November 24, 2025
சிந்தாமணிப்பட்டி அருகே கொலை மிரட்டல்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு கடவூரில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தரகம்பட்டியில் இருந்த போது அங்கு வந்த கௌதமன் கார்த்திக் ராஜா மாணிக்கவாசகம் ஆகியோர் அவரை தகாத வார்த்தை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


