News April 6, 2025

கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

கரூரில் விபத்தில் இளைஞர் படுகாயம்!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ஜெய பிரதாப் 21. இவர் நேற்று தனது ஸ்கூட்டியில் பிச்சம்பட்டி சாலையில் வந்த போது எதிரே ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதியதில் ஜெயபிரதாப் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

அரவக்குறிச்சி திமுகவினர் உறுதி மொழி ஏற்பு!

image

இன்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 9 இல் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கின்ற நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

கரூர்: 12th போதும் நபார்டு வங்கியில் வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!