News August 3, 2024
கரூர்: பக்தர்களுக்கு வெளியான தடை உத்தரவு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் தேதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Similar News
News November 4, 2025
கரூர்: EB பில் அதிகமா வருதா?

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 4, 2025
கரூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்

கரூர் மக்களே, பட்டா மாற்றம் சிட்டா, சாதி சான்றிதழ், இருப்பீட மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு சாம் கண்டிப்பாக ஒருமுறையாவது விஏஓ, தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும். அப்போது அங்கு அதிகாரிகள் முறையாக பணி செய்யாமல் லஞ்சம் கேட்டால் (04324-225100) என்ற எண்ணில் புகார் அளிக்கவும். (SHARE பண்ணுங்க)
News November 4, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) இன்று (04.11.25) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு 04.12.25-க்குள் மீண்டும் பெறப்படும். இதில் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட ஒரு படிவங்களை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


