News August 3, 2024

கரூர்: பக்தர்களுக்கு வெளியான தடை உத்தரவு

image

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் தேதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Similar News

News December 1, 2025

கரூர்: TNPSC இலவச பயிற்சி வகுப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

image

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (01.12.2025) தொடங்கின. டிசம்பர் 2025 முதல் மே 2026 வரை நடைபெறும் ஆறு மாத பயிற்சி, TNPSC Group I, II, IIA, IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள முன்பதிவு forms.gle/p4rp29kbe8PXqvet9 மூலம் செய்யலாம். மேலும் இந்த எண்ணை 63830-50010 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News December 1, 2025

கடவூர் பகுதியில் பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

image

கடவூர், தென்னிலை அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் நேற்று தனது பைக்கில் திருமலைபாளையம் சாலையில் சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 1, 2025

கரூர்: வழக்கறிஞர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

image

கரூர் தாந்தோணி மலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் (56), முத்துலாடம் பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத ராயல் என்ஃபீல்டு புல்லட் மோதி நிற்காமல் தப்பியது. இதில் அவர் தலை மற்றும் கழுத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!