News March 26, 2025
கரூர்: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

கரூர் அரசு காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (75). இவர் காந்திகிராமத்தில் நடந்து சென்றுபோது, தாந்தோணிமலையைச் சேர்ந்த வினோத் குமார் மனைவி கிரிஜா (37) ஓட்டி வந்த டூ வீலர் சீனிவாசன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News November 22, 2025
கரூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

புகலூர், வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் தனது மனைவி தேவகி என்பவரை தனது ஸ்கூட்டியில் பின்னால் அமர வைத்து கொண்டு நேற்று கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 22, 2025
தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன்!

கரூர் தெற்கு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (62) மற்றும் அவரது மனைவி செல்வி (54) சொத்து பிரச்சனையை காரணமாக ஹரிகிருஷ்ணன் (47) மற்றும் அவரது மகன் கவின் (25) கடந்த 20-அன்று இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கனகராஜ் புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் ஹரிகிருஷ்ணன் மற்றும் கவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 22, 2025
கரூர்: பைக் மீது பேருந்து மோதி பலி

சென்னை நோக்கி பளளப்பட்டியில் புறப்பட்ட அரசு பேருந்து அரியலூர் ஓட்டுநர் முருகாநந்தம் ஓட்டியபோது, ரங்கராஜ்நகர் அருகே எதிர் திசை பைக் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(60) தீவிர காயமடைந்து தனியார் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


