News March 26, 2025

கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News December 29, 2025

கரூர்:ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

image

கரூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 29, 2025

JUST IN: கரூரில் பிரபல நடிகை மீது வழக்கு!

image

கரூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ராணி அவரது கணவர் பாலாஜி, பாலாஜியின் நண்பர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 29, 2025

BREAKING: அரவக்குறிச்சியில் அதிரடி காட்டிய செங்கோட்டையன்!

image

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரியமுல் ஆசியா இன்று அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.செங்கோட்டையன் கட்சியின் இணைந்த நாள் முதலே அதிமுகவில் உள்ள பலர் தவெக இனைவார்கள் என தெரிவித்தார். அதன்படி நேற்று அதிமுக ஓமலூர் EX எம்எல்ஏ இணைந்தநிலையில் தற்போது மரியமுல் ஆசியா இணைந்துள்ளார்.

error: Content is protected !!