News March 26, 2025
கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 8, 2025
கரூர்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

கரூர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 8, 2025
அரவக்குறிச்சியில் விபத்து இளம்பெண் பலி!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சாலையில், நேற்று பாரதி (25) என்ற பெண்மணி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவருக்கு முன்னால் அருள் என்பவர் ஓட்டிச் சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டு நின்றது. இதன் காரணமாக, பாரதி ஓட்டி வந்த வாகனம் லாரியின் பின்புறம் மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே பாரதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 8, 2025
கரூர் அருகே அதிரடி கைது!

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள காட்டாம்புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 54), கணேசன் (38), தேர்நிலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (29), நடுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தானம் (42), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


