News March 26, 2025

கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News January 3, 2026

கரூர்: சித்தப்பாவுடன் முறையற்ற உறவு!பகீர் சம்பவம்

image

கோவையை சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அரவக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 3, 2026

குளித்தலை அருகே வசமாக சிக்கிய தொழிலாளி!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் பாலமுருகன் (33). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் கஞ்சா வைத்திருந்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 560 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்

News January 3, 2026

கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!