News March 26, 2025

கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News February 22, 2026

கரூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8.கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 22, 2026

மாமனாரை வெட்டிய மருமகன் கரூரில் பயங்கரம்!

image

கரூர் மேட்டு மகாதானபுரத்தில், மது போதையில் இருந்த தர்மதுரை என்பவர் தனது மாமனார் வடிவேலை ஆபாசமாகத் திட்டி, அருவாளால் தலையில் வெட்டினார். பலத்த காயமடைந்த வடிவேல் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2026

கரூருக்கு அறிவித்தது தமிழக அரசு!

image

தமிழக அரசு கரூரில் 64,000 சதுர அடியில், தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியுள்ளது. ரூ.37 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகள் 4 மாதங்களில் துவங்கவுள்ளன. இதே போல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாகவுள்ளது.

error: Content is protected !!