News March 31, 2024
கரூர்: தண்ணீர் வாளியில் சிறுமி உயிரிழப்பு

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
Similar News
News April 9, 2025
கரூரில் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 04324-296650
▶️பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்- 04324-255305 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04324-256508 ▶️மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 04324-256728 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News April 9, 2025
கரூர் ‘குடி’மகன்களே உஷார்;10-ம் தேதி மது கிடைக்காது!

கரூர் மாவட்டத்தில் நாளை மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் FL2 உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் மதுக்கூடத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 9, 2025
க.பரமத்தியில் 96.8 டிகிரி செல்சியஸ் பதிவு

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று, அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டாம்.