News September 15, 2024
கரூர்: கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

கரூர்: ஆண்டாங்கோவில் பெரியார் நகரை சேர்ந்த ஜெகன்ராஜ் (32) பழநி ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த திருமணமான தனது சிறுவயது தோழிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் இளம்பெண் வீட்டுக்கு சென்று இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் ஜெகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 24, 2025
கரூர் மக்களே மின்தடை அறிவிப்பு! உஷார்

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஒத்தகடை, அரவக்குறிச்சி, வெள்ளியணை, தாளப்பட்டி, வல்லம், அய்யர்மலை, தோகைமலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், காணியாளம்பட்டி, மாயனுர், கொசூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, பஞ்சப்பட்டி, கருங்கல்பட்டி, பாலம்பாளுபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News November 24, 2025
குளித்தலை: இந்து முன்னணி நகர துணை தலைவர் காலமானார்

கரூர் மாவட்ட குளித்தலை இந்து முன்னணி கரூர் நகர துனை தலைவர் தியாகராஜன் உடல் நலக் குறைவாக இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 8 மணி அளவில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பலரும் இறந்த தியாகராஜன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
News November 24, 2025
சிந்தாமணிப்பட்டி அருகே கொலை மிரட்டல்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு கடவூரில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தரகம்பட்டியில் இருந்த போது அங்கு வந்த கௌதமன் கார்த்திக் ராஜா மாணிக்கவாசகம் ஆகியோர் அவரை தகாத வார்த்தை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


