News September 15, 2024

கரூர்: கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

image

கரூர்: ஆண்டாங்கோவில் பெரியார் நகரை சேர்ந்த ஜெகன்ராஜ் (32) பழநி ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த திருமணமான தனது சிறுவயது தோழிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் இளம்பெண் வீட்டுக்கு சென்று இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் ஜெகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 28, 2025

கரூர்: இனி அலைய தேவையில்லை!

image

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், www.tnpds.gov.in இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு SHAER பண்ணுங்க!

News November 28, 2025

கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News November 28, 2025

கரூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!