News September 15, 2024
கரூர்: கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

கரூர்: ஆண்டாங்கோவில் பெரியார் நகரை சேர்ந்த ஜெகன்ராஜ் (32) பழநி ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த திருமணமான தனது சிறுவயது தோழிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் இளம்பெண் வீட்டுக்கு சென்று இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் ஜெகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 29, 2025
கரூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
கரூரில் வேலை அறிவித்தார் கலெக்டர்!

கரூரில் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் வரும் அக்.31 வெண்ணைமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு அனைத்து வகையான படிப்பினரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தங்கவேல் அழைப்பு!
News October 29, 2025
கரூர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


