News April 8, 2025
கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News September 17, 2025
JUST IN:கரூர் திமுக முப்பெரும் விழாவில் திடீர் மழை!

கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.இந்தநிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. இதனால், விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்.
News September 17, 2025
கரூரில் முதலமைச்சரை வரவேற்ற ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கரூருக்கு வருகை புரிந்தமைக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புத்தகத்தை வழங்கி வரவேற்பு செய்தார்.