News August 24, 2024
கரூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
கரூர்: யுபிஎஸ்சி தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் மாணவன்!

கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்.டி. ஆய்வு மேற்கொண்டு வரும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கூட்டக்காரன்பட்டி சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளர் சி. முனியாண்டி (30), யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார். அவருக்கு சிறந்த நூலக பயன்பாட்டாளர் விருதை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுதா வழங்கி பாராட்டினர்.
News November 15, 2025
சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் 25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.
News November 15, 2025
கரூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

குளித்தலை அடுத்த நெய்தலூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(35). இவர் வெண்ணைமலை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன் தான் பணிபுரியும் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமிக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி புகார் அளிக்கையில் கரூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


