News August 24, 2024
கரூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
கரூர்: சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்கள்!

கரூர்: கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (19) தனது நண்பர் பாலாஜியுடன் இரும்பூதிபட்டி இபி அலுவலகம் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது, பின்னால் வந்த சிவசக்தி என்பவரின் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேஷ்குமாரின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
News September 16, 2025
கரூர்: முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19.09.2025 அன்று மாலை 2.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அந்நாளில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
News September 15, 2025
கரூர்: தேர்வு இல்லாமல்! அரசு வேலை

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் இங்கு <