News May 17, 2024

கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Similar News

News October 13, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆட்சியர் தகவல்

image

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஹபீப் ஷாதி மஹாலிலும், கூடலூர் எம்ஜிஆர் நகர் வீரக்குமார் மண்டபத்திலும், தான்தோன்றி மலை நாயுடு மஹால் மண்டபத்திலும், வெள்ளியணை குமாரமங்கலம் ஊராட்சியில் சமுதாய மண்டபத்திலும், குளித்தலை ராஜேந்திரம் எஸ்.எம். எஸ் மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற இருக்கின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News October 13, 2025

கரூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

image

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <>www.tnpds.gov.in <<>>இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு இதை SHAER பண்ணுங்க.

News October 13, 2025

கரூர்: அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் பலி

image

கரூர், பாலவிடுதி அருகே உள்ள உடையாபட்டி – கடவூர் சாலையில் சுரேஷ்குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சுரேஷ்குமார் மனைவி லீலா ராணி புகார் கொடுத்ததின் அடிப்படையில் பால விடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!