News May 17, 2024
கரூர் கலெக்டர் அறிவிப்பு

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Similar News
News December 20, 2025
கரூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <
News December 20, 2025
கரூரில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,18,672 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,94,044 பெண் வாக்காளர்கள் 4,24,546 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில் டிராகன் பழம் பயிரிடப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம், டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு, ரூ.1.62 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் (அ ) மேலும் விபரங்களுக்கு https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ இணைய தளத்தில் காணலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.


