News May 17, 2024

கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Similar News

News November 14, 2025

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News November 14, 2025

கரூர் அருகே விபத்து இளைஞர் பலி!

image

புகழூர் அருகே சின்ன வாங்கலம்பாளையம், கச்சைகட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (29). இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பால்வார்பட்டி பிரிவு ரோடு அருகே, தனது டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, தான்தோன்றிமலையை சேர்ந்த திருமாவளவன் (45), என்பவர் ஓட்டி வந்த லாரி, டூவீலர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். தென்னிலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் தேர்வு) நவ.15, 16 நடக்கிறது. இதில், 5 மையங்களில் நாளையும், 19 தேர்வு மையங்களில் நாளை மறுநாளும் நடக்கிறது. மையங்களில் முறையே, 1,254 மற்றும், 5,228 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை, 9:30 மணிக்குள் மையத்தில் இருக்க வேண்டும் அதற்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!