News May 17, 2024
கரூர் கலெக்டர் அறிவிப்பு

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Similar News
News November 4, 2025
கரூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்

கரூர் மக்களே, பட்டா மாற்றம் சிட்டா, சாதி சான்றிதழ், இருப்பீட மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு சாம் கண்டிப்பாக ஒருமுறையாவது விஏஓ, தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும். அப்போது அங்கு அதிகாரிகள் முறையாக பணி செய்யாமல் லஞ்சம் கேட்டால் (04324-225100) என்ற எண்ணில் புகார் அளிக்கவும். (SHARE பண்ணுங்க)
News November 4, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) இன்று (04.11.25) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு 04.12.25-க்குள் மீண்டும் பெறப்படும். இதில் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட ஒரு படிவங்களை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
கரூர் டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

கரூர், 33/11 பாலம்மாள்புரம் துணைமின் நிலையத்தில் உள்ள 11 கிலோ மாரியம்மன் கோவில் பீடர், புதுத்தெரு, ஆலமரதெரு, கருப்பாயிகோவில் தெரு, மாவடியான் கோவில் தெரு. ஐந்துரோடு, தேர்வீதி, குருநாதன் தெரு., அனந்தராயன் கோவில் தெரு, மார்கெட், சர்ச் கார்னர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது. என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


