News April 14, 2025
கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 17, 2025
அரவக்குறிச்சி: பைக்கில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா செம்பாறைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேலு (39). இவர் தனது பைக்கில் நேற்று செங்கல்பட்டி குறுக்கு சாலையில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி தமிழ்ச்செல்வி புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 17, 2025
கரூர்: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா வெண்ணமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (27). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று தனது பைக்கில் செம்மடை சாலையில் சென்ற போது எதிரே விஜயகுமார் ஓட்டி வந்த மேக்சிகேப் வேன் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து அவரின் தந்தை ராமசாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News October 17, 2025
கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் கவலைக்கிடம்!

கரூர் இரும்பூதிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே மாணிக்க சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாணிக்க சுந்தரம் வாகனத்தின் மீது பின்னால் மோதியதில், தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.