News April 14, 2025
கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News November 17, 2025
கரூர் அருகே வசமாக சிக்கிய பெண்!

கரூர் பசுபதிபாளையம் கொடியரசு கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானசாமி மனைவி வளர்மதி (62). இவர் அப்பகுதியில் உள்ள வடக்கு தெருவில் முள்ளு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் மது விற்ற வளர்மதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்
News November 17, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அடுத்த பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் விஜயகுமார் (65). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற விஜயகுமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
News November 16, 2025
கரூர்: லாட்டரி டிக்கெட் விற்றவர் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் சண்முகவேல் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தார். பாலவிடுதி போலீசார் தகவல் அறிந்து, சண்முகவேல் என்பவரிடமிருந்து வெள்ளை தாளில் எழுதப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சண்முகவேல் மீது பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


