News March 27, 2025

கரூர்: ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

image

அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்த ஊரான கரூரில் டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பாக அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என்று போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 22, 2025

கரூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

image

புகலூர், வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் தனது மனைவி தேவகி என்பவரை தனது ஸ்கூட்டியில் பின்னால் அமர வைத்து கொண்டு நேற்று கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 22, 2025

தம்பதியை கம்பியால் தாக்கிய தந்தை, மகன்!

image

கரூர் தெற்கு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (62) மற்றும் அவரது மனைவி செல்வி (54) சொத்து பிரச்சனையை காரணமாக ஹரிகிருஷ்ணன் (47) மற்றும் அவரது மகன் கவின் (25) கடந்த 20-அன்று இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கனகராஜ் புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் ஹரிகிருஷ்ணன் மற்றும் கவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News November 22, 2025

கரூர்: பைக் மீது பேருந்து மோதி பலி

image

சென்னை நோக்கி பளளப்பட்டியில் புறப்பட்ட அரசு பேருந்து அரியலூர் ஓட்டுநர் முருகாநந்தம் ஓட்டியபோது, ரங்கராஜ்நகர் அருகே எதிர் திசை பைக் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(60) தீவிர காயமடைந்து தனியார் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!