News April 30, 2025
கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
கரூரில் நாளை.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், வெண்ணைமலை வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2026-ம் ஆண்டிற்கான TNPSC-Gr-I &GR-2, ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு (நவ.28) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94990-55912 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
News November 27, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்: தீவிர விசாரணை

கடந்த செப்., 27ல், கரூரில் தவெக., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சிபிஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த ராகுல்காந்தி, கோகுலக்கண்ணன், கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகி நவலடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
News November 26, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.11.2025) தேதி அன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


