News April 30, 2025
கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
கரூர்: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

கரூர் மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். https://www.crstn.org/birth_death_tn/BCert என்ற இணையதளத்தில் நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!
News December 24, 2025
கரூர்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கணக்கு இருப்பு (Balance), மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கடன் விவரங்களை அறிய வங்கிக்கு நேரில் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் போதும்
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News December 24, 2025
கரூரில் போலீசுக்கு பயந்து கலசத்தை வீசிச் சென்ற திருடர்கள்!

கரூர் மாயனூர் அருகே சங்கரேஸ்வரர் கோவிலில் கடந்த வாரம் திருடப்பட்ட கலசத்தை, மர்ம நபர்கள் நேற்று அருகில் உள்ள வயல் காட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


