News April 30, 2025
கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 22, 2025
வேலாயுதம்பாளையத்தில் உருட்டுக்கட்டை திருடர்கள்!

வேலாயுதம்பாளையத்தில் இரவு நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட நபர்கள் டவுசர், ஜட்டி மட்டும் அணிந்து, முகம் மறைத்து, கையில் உருட்டுக்கட்டை மற்றும் கத்தி வைத்துக்கொண்டு வீடுகளில் புகுந்து மிரட்டி, 4 வீடுகளில் நகை-பணம் திருடி சென்றனர். இரவில் யார் எனத் தெரியாமல் கதவு தட்டினால் திறக்க வேண்டாம் என்றும், சந்தேக நபர்கள் காணப்பட்டால் உடனே தகவல் அளிக்க வேண்டுமென்று வேலாயுதம்பாளையம் காவல்துறை தெரிவித்தனர்.
News November 22, 2025
கரூர்: வாக்களர் கவனத்திற்கு IMPORTANT

கரூர் மாவட்டம், 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்யில் கரூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. https://karur-electors.vercel.app/?tsc=AC152 இந்த இணையதளம் மூலமாக தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.


