News April 23, 2025

கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 17, 2025

கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ரஜோத் மண்டல் 32. இவர் வெண்ணமலை சிட்கோ கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இவர் நேற்று நண்பர் தபாஸ் தகி என்பவரை பைக்கில் பின்னால் அமர வைத்து கொண்டு மன்மங்கலம் சாலையில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரஜோத் மண்டல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News December 17, 2025

குளித்தலை அருகே வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணேசபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட லாலாபேட்டையை சேர்ந்த முருகானந்தம் 57, பாஸ்கர் 26, அருண் 25 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 500 பறிமுதல் செய்தனர்

News December 17, 2025

அறிவித்தார் கரூர் ஆட்சியர்!

image

கரூர்: தமிழ்நாடு அரசின் 2025 ஆம் ஆண்டின் கபீர் புரஸ்கர் விருதுக்கு வகுப்பு கலவரம் மற்றும் வன்முறையிலோ மக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில், அவரது வீரம் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. https://awards.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!