News April 10, 2025
கரூருக்கு பெருமை சேர்த்த வீரர்

கரூர் மாவட்ட பாரா தடகள விளையாட்டு வீரர் ஜீவானந்தம் நடந்து முடிந்த பாரா தடகள போட்டியிலும் மற்றும் பாரா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உயரிய ஊக்கத்தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கினார். கரூர் தடகளத்தில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Similar News
News November 23, 2025
கரூரில் தட்டி தூக்கிய மதுவிலக்கு போலீசார்!

கரூர் மாவட்ட மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நங்கவரம், லாலாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் மதுவிற்பனை குறித்து சோதனை செய்தனர். இதில் சட்ட விரோதமாக மது விற்ற புண்ணியமூர்த்தி (36), அன்னக்கிளி (60), நதியா 38 ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News November 23, 2025
கரூர்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

கரூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
News November 23, 2025
கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

கரூர் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று தனது பைக்கில் திருமாநிலையூர் சாலையில் சென்ற போது சுரேஷ்குமார் ஒட்டி சென்ற மினி வேன் திடீரென வலது புறம் திரும்பியபோது பைக் மோதியதில் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பலத்த காயத்துடன் கரூர் GH-ல் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


