News April 10, 2025

கரூருக்கு பெருமை சேர்த்த வீரர்

image

கரூர் மாவட்ட பாரா தடகள விளையாட்டு வீரர் ஜீவானந்தம் நடந்து முடிந்த பாரா தடகள  போட்டியிலும் மற்றும் பாரா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்  உயரிய ஊக்கத்தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கினார். கரூர் தடகளத்தில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Similar News

News September 16, 2025

கரூர்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சேலம் இரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: மைசூர் -காரைக்குடி சிறப்ப ரயில் வாரம் இருமுறை இயக்கப்படுகிறது. மைசூர்-காரைக்குடி ரயில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர் வழியாக அடுத்த நாள் காலை 11 மணிக்கு காரைக்குடி வருகிறது. இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.

News September 16, 2025

கரூரில் மினி பஸ் மோதல் முதியவர் படுகாயம்

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சை காலக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜ் 70. இவர் நேற்று கரூர் மினி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது யுவராஜ் ஓட்டி வந்த மினி பேருந்து மோதியதில் நடராஜ் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நடராஜ் மகள் மேனகா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 16, 2025

கரூரில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலி!

image

கரூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(38). இவர் சடையம்பாளையத்தில் கார்ட் ர்போடு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று(செப்.15) நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!