News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 17, 2025
அரவக்குறிச்சி: பைக்கில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா செம்பாறைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேலு (39). இவர் தனது பைக்கில் நேற்று செங்கல்பட்டி குறுக்கு சாலையில் சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி தமிழ்ச்செல்வி புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 17, 2025
கரூர்: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா வெண்ணமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (27). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று தனது பைக்கில் செம்மடை சாலையில் சென்ற போது எதிரே விஜயகுமார் ஓட்டி வந்த மேக்சிகேப் வேன் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து அவரின் தந்தை ராமசாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News October 17, 2025
கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் கவலைக்கிடம்!

கரூர் இரும்பூதிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே மாணிக்க சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாணிக்க சுந்தரம் வாகனத்தின் மீது பின்னால் மோதியதில், தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.