News September 14, 2024

கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

image

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 10, 2025

கரூரில் கட்டட தொழிலாளி மர்ம மரணம்!

image

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிசாமி (55), இரண்டு மனைவியுடன் இருந்தும் சடையம்பாளையத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2025

கரூரில் கோர விபத்து; மூதாட்டிப் படுகாயம்!

image

கரூர் வீரணம்பட்டி அம்மன் கோவில் அருகே, மாரியாயி (70) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவ்வழியே அடையாளம் தெரியாத வந்த நான்கு சக்கர வாகனம், மாரியாயி மீது மோதியதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி மூலமாக குற்றவாளி தேடி வருகின்றனர்.

News December 10, 2025

குளித்தலையில் போலியான லாட்டரி விற்ற நபர் கைது!

image

குளித்தலை பெரியபாலம் பகுதியில் பொதுமக்களிடம் போலியான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, ஐநூற்றுமங்களம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து நேற்று பெரியபாலம் பகுதியில் லாட்டரி விற்ற தண்ணீர் பள்ளியை சேர்ந்த ரமேஷ் (51) என்பவர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் போலியான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!