News April 21, 2025
கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 18, 2025
கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கரூர் மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், “போதைப்பொருட்கள் உங்களைக் கட்டுப்படுத்த விட வேண்டாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. “Just Say NO to Drugs” போன்ற வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை 9498100780 என்ற வாட்ஸ்அப் (அ) 100-க்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 18, 2025
கரூரில் ஜவுளி பூங்காவை திறந்து வைத்து அமைச்சர்!

கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் உள்ள ஓயாசிஸ் ஜவுளிப்பூங்காவை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
கரூர் அருகே பெண் விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஆண்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (50). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனவிரக்த்தியில் சாணப்பவுடரை சாப்பிட்டுள்ளார். பின் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை!