News April 16, 2025
கரூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கரூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <
Similar News
News November 3, 2025
கரூர்: மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கண்ணன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து புதிய கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக விமல் ராஜ் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட மாவட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
News November 3, 2025
கரூர்: கரண்ட் பில் அதிகமா வருதா?

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 3, 2025
கரூர்: 10வது படித்தால் அரசு வேலை ரெடி!

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


