News December 31, 2024
கரூரில் மானிய விலையில் பம்ப் செட் மோட்டார்

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி (Mobile Phone Operated Automatic Pumpset Controller / Remote Motor Operator for Electric Pumpset) மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக 9443156424, 9443567583, 9443922630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
கரூர்: விசாரணை வளையத்தில் விஜய்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜயிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்தநிலையில் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 14, 2025
கரூரில் உயிரைக் பறித்த ‘மிஸ்டரி’ வாகனம்!

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பெரிய காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (60); இவர் கடந்த, 11ம் தேதி இரவு குப்புச்சிப்பா ளையம் பகுதியில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடை யாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த காமராஜ், நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது இதுகுறித்து காமராஜ் மகன் ஜோதிவாசன் (32) கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
கரூர்: வாக்கு இயந்திரங்களை பார்வையிட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப.,தலைமையில் இன்று (13.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், முதற்கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


