News February 15, 2025

கரூரில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர் குண்டாஸில் கைது

image

கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது  மல்லிகை கடையில் மண்ணெண்ணெய் நிரப்பி தீ பற்ற வைத்தது தொடர்பான வழக்கில்  முகமது அன்சாரி என்பர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை பேரில் ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின்படி இன்று முகமது அன்சாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News December 16, 2025

தேசிய அளவில் கவனம் ஈர்த்த கரூர் மாணவிகள்!

image

குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இதில் கரூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகளான ஹிவன்ஷிகா, சஞ்சிதா ஆகிய இருவரும் தங்களின் ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் வழிகாட்டுதலுடன், ஆகாயத் தாமரையில் இருந்து பெண்களுக்கான சானிட்டரி நாப்கின், மட்கக்கூடிய காகிதங்கள், அட்டை பெட்டிகள் தயாரிக்கலாம் என நிரூபித்துள்ளனர்.

News December 16, 2025

கரூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

image

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<> கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News December 16, 2025

கரூரில் ரூ.2 ஆயிரம் வாங்கியதற்கு 3 ஆண்டு சிறை!

image

கரூரில் மின் கம்பம் நடுவதற்கு கடந்த 2011ம் ஆண்டு (14 ஆண்டுகளுக்கு முன்பு) சுந்தர்ராஜன் என்பவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய உதவி பொறியாளர் நாராயணன் என்பவருக்கு, 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

error: Content is protected !!