News August 3, 2024

கரூரில் பூக்கள் விலை உயர்வு

image

இன்று ஆடி 18 ஐ முன்னிட்டு கரூரில் பூ மார்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600ல் இருந்து, 800 ரூபாய்க்கும், முல்லை பூ, 300 லிருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200லிருந்து, 250 க்கும், ரோஜா, 200 லிருந்து, 300 ரூபாய்க்கும், துளசி, 4 கட்டு 60 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து, ஒரு கட்டு 70 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News December 19, 2025

கரூர்: ரூ.1 லட்சம் மானியம் – கலெக்டர் அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 40 சதவீதம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

கரூர்: மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

image

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (டிச.20) தென்னிலை, க.பரமத்தி, நொய்யல், ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆண்டிசெட்டிப்பாளையம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், தென்னிலை, மொஞ்சனூர், பூலாம்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், குளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்காது.

News December 19, 2025

கரூர் துயரம்; விஜய் குறித்து பரபரப்பு போஸ்டர்கள்

image

கரூர் மாவட்டத்தில், வடிவேல் நகர் பகுதியில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதன் தொடர்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பற்றி தனித்துவ போஸ்டரால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில் இங்கிருந்து ஆடியோ லான்ச்சுக்கு மலேசியா செல்கிறீர்கள், மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிகிறீர்கள், ஏன் கரூருக்கு செல்லவில்லை என வாசகம் பதியப்பட்டிருந்தது.

error: Content is protected !!