News September 28, 2024
கரூரில் தொழிலாளர் உதவி ஆணையர் முக்கிய அறிவிப்பு

கரூரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் இணையவழி தளத்தில் https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் படிவம் ஒய்ல் பதிவுக்கட்டணம் ரூ.100-ஐ செலுத்தி 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
கரூர்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சேலம் இரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: மைசூர் -காரைக்குடி சிறப்ப ரயில் வாரம் இருமுறை இயக்கப்படுகிறது. மைசூர்-காரைக்குடி ரயில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர் வழியாக அடுத்த நாள் காலை 11 மணிக்கு காரைக்குடி வருகிறது. இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.
News September 16, 2025
கரூரில் மினி பஸ் மோதல் முதியவர் படுகாயம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சை காலக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜ் 70. இவர் நேற்று கரூர் மினி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது யுவராஜ் ஓட்டி வந்த மினி பேருந்து மோதியதில் நடராஜ் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நடராஜ் மகள் மேனகா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
கரூரில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலி!

கரூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(38). இவர் சடையம்பாளையத்தில் கார்ட் ர்போடு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று(செப்.15) நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.