News September 28, 2024
கரூரில் தொழிலாளர் உதவி ஆணையர் முக்கிய அறிவிப்பு

கரூரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் இணையவழி தளத்தில் https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் படிவம் ஒய்ல் பதிவுக்கட்டணம் ரூ.100-ஐ செலுத்தி 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
கரூரில் அலப்பறை செய்தவர் மீது பாய்ந்த வழக்கு!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, கழுகூர் பேருந்து நிறுத்த பகுதியில் நேற்று இரவு சின்னதுரை என்பவர் மது போதையில் பொதுமக்கள் மத்தியில் அலப்பறை செய்த்தாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சின்னதுரையை மடக்கி பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
News December 18, 2025
கரூர் மாணவிகளை போட்டோ எடுத்த வடமாநில நபர் கைது!

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் தினசரி பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வட மாநிலத்தவர் ஒருவர் தினசரி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களே வட மாநிலத்தவரை பிடித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை செய்கின்றனர்.
News December 18, 2025
கரூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் வாழும், பெண்கள் முன்னேற்றத்திற்குச் சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, 2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவின் போது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஔவையார் விருது வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி 9384980066 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


