News September 28, 2024

கரூரில் தொழிலாளர் உதவி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் இணையவழி தளத்தில் https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் படிவம் ஒய்ல் பதிவுக்கட்டணம் ரூ.100-ஐ செலுத்தி 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 19, 2025

BREAKING: கரூரில் 79,690 பெயர்கள் நீக்கம்

image

கரூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.19) வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

1) எஸ்ஐஆரு-க்கு முன்- 8,98,362

2) எஸ்ஐஆரு-க்கு பின்- 8,18,672

இதில் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை பதிவுகள், குடிபெயர்ந்தோர் என, (மொத்தம்- 79,690) பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

News December 19, 2025

கரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

News December 19, 2025

கரூரில் டிராக்டர் பின்னால் ஸ்கூட்டி மோதி விபத்து!

image

கரூர் காளியப்பனூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70). இவர் தனது ஸ்கூட்டியில் தாந்தோணிமலை சாலையில் சென்றபோது, முன்னாள் பிரவீன் குமார் ஓட்டிச் சென்ற டிராக்டர் திடீரென எவ்வித சிக்னல் இன்றி திரும்பிய போது, பின்னால் ஸ்கூட்டி மோதி ராஜமாணிக்கம் கீழே விழுந்து தலை, வலது காலில் காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். தாந்தோணிமலை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!