News August 8, 2024
கரூரில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் சமுகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News November 14, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் தேர்வு) நவ.15, 16 நடக்கிறது. இதில், 5 மையங்களில் நாளையும், 19 தேர்வு மையங்களில் நாளை மறுநாளும் நடக்கிறது. மையங்களில் முறையே, 1,254 மற்றும், 5,228 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை, 9:30 மணிக்குள் மையத்தில் இருக்க வேண்டும் அதற்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (14.11.25) காலை 10 மணி அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
News November 13, 2025
ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கு பயிற்சி!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.


