News August 7, 2024

கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்தர் மஹாலில், 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கைத்தறி கண்காட்சி துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார். பின்னர் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். உடன் கைத்தறி உதவி இயக்குநர் திரு.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 29, 2025

கரூரில் வேலை அறிவித்தார் கலெக்டர்!

image

கரூரில் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் வரும் அக்.31 வெண்ணைமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு அனைத்து வகையான படிப்பினரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தங்கவேல் அழைப்பு!

News October 29, 2025

கரூர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாநகராட்சியில் வார்டு எண் 47க்கு சுக்காலியூர் நவலடியான் மண்டபத்தில் நாளை ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும், இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

error: Content is protected !!