News August 7, 2024
கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்தர் மஹாலில், 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கைத்தறி கண்காட்சி துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார். பின்னர் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். உடன் கைத்தறி உதவி இயக்குநர் திரு.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 25, 2025
கரூர்: ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைகள்!

1) பரோடா வங்கியில் வேலை -(https://bankofbaroda.bank.in/)
2) தமிழக சுகாதாரத்துறையில் வேலை-(mrb.tn.gov.in)
3) மத்திய உளவுத்துறையில் வேலை- (mha.gov.in)
4) ரயில்வேயில் 1,785 பேருக்கு வேலை -( rrcser.co.in)
5) சென்னை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -(clri.org)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 25, 2025
கரூர் மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் அருகே தளவாபாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) சிறப்பு கல்வி கடன் முகாம் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு, வருமான சான்றிதழ், கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கரூர் மக்களே மின்தடை அறிவிப்பு! உஷார்

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஒத்தகடை, அரவக்குறிச்சி, வெள்ளியணை, தாளப்பட்டி, வல்லம், அய்யர்மலை, தோகைமலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், காணியாளம்பட்டி, மாயனுர், கொசூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, பஞ்சப்பட்டி, கருங்கல்பட்டி, பாலம்பாளுபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க மக்களே!


