News May 8, 2025
கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
கரூர் அருகே அதிரடி கைது; போலீசார் நடவடிக்கை

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக பெண்ணின் தாயார் புகார் கொடுத்திருந்தார். மேலும் நங்கவரம் போலீசார் சிசிடிவி மூலமாக தேடிய நிலையில், நேற்று இரவு கடத்தி சென்ற ரஞ்சித் என்பவரை அதிரடியாக மடக்கிப்பிடித்து நங்கவரம் போலீசார் கைது செய்து பெண்ணை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
News December 23, 2025
கரூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

கரூர் மாவட்டம், சின்னாண்டாங் கோவில் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவரின் மனைவி குடும்ப சண்டையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த பப்லு மன விரக்தியில் நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 23, 2025
கரூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

கரூர் மாவட்டம், சின்னாண்டாங் கோவில் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவரின் மனைவி குடும்ப சண்டையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த பப்லு மன விரக்தியில் நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


