News May 8, 2025
கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
கரூர்: 10th போது அரசு வேலை.. நாளை கடைசி

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 8, 2025
கரூர் சம்பவம்: 8 பேருக்கு முன்ஜாமீன்

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்ச்சியின் போது, நெரிசலில் சிக்கியவர்களை அழைத்து சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவசர ஊர்தி ஓட்டுநர்கள், 8 பேர் மீது புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்ரீமதி, விசாரணைக்கு முழுமையான ஒத்துழைக்க வேண்டும் என 8 பேருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார்.
News November 8, 2025
108 ஆம்புலன்ஸ் மோதி நடந்த சென்ற மூதாட்டி பலத்த காயம்

கரூர் சேமாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்சியம் 64. இவர் நேற்று கரூர் மனோகரா கார்னர் சாலையில் நடந்து சென்ற போது மனோஜ் குமார் ஓட்டி வந்த 108 ஆம்புலன்ஸ் மோதியதில் இளஞ்சியம் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் புனிதா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


