News May 8, 2025
கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
குளித்தலை அருகே வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணேசபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட லாலாபேட்டையை சேர்ந்த முருகானந்தம் 57, பாஸ்கர் 26, அருண் 25 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 500 பறிமுதல் செய்தனர்
News December 17, 2025
அறிவித்தார் கரூர் ஆட்சியர்!

கரூர்: தமிழ்நாடு அரசின் 2025 ஆம் ஆண்டின் கபீர் புரஸ்கர் விருதுக்கு வகுப்பு கலவரம் மற்றும் வன்முறையிலோ மக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில், அவரது வீரம் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. https://awards.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News December 17, 2025
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா

கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஆட்சிமொழி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சட்ட வார விழா 17.12.2025 முதல் 26.12.2025 வரை கொண்டாடப்படுகிறது. இந்த
நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


