News April 6, 2025
கரூரில் கவிழ்ந்த கல்லூரி பஸ் ; 7 பேர் படுகாயம்

கரூர்: அரவக்குறிச்சி அருகே, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்க், நேற்று(ஏப்.5) காலை, 38 மாணவர்களை அழைத்துச் சென்ற கல்லுாரி பஸ், அரவக்குறிச்சி அருகே, சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
Similar News
News December 1, 2025
குளித்தலை அருகே நடந்த சம்பவம்!

குளித்தலை அருகே நெய்தலூர் காலனி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முதலைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (31), பெரியபனையூரை சேர்ந்த ஏழுமலை (57) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்
News December 1, 2025
கரூர்: TNPSC இலவச பயிற்சி வகுப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (01.12.2025) தொடங்கின. டிசம்பர் 2025 முதல் மே 2026 வரை நடைபெறும் ஆறு மாத பயிற்சி, TNPSC Group I, II, IIA, IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள முன்பதிவு forms.gle/p4rp29kbe8PXqvet9 மூலம் செய்யலாம். மேலும் இந்த எண்ணை 63830-50010 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News December 1, 2025
கடவூர் பகுதியில் பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

கடவூர், தென்னிலை அடுத்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் நேற்று தனது பைக்கில் திருமலைபாளையம் சாலையில் சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


