News August 25, 2024
கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
கரூர்: 10வது முடித்தால் இலவசம்..அறிய வாய்ப்பு!

கரூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச பெண்கள் முடிதிருத்தும் மற்றும் அழகு கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. 93 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், அழகு கலை தொடர்பாக, அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 10, 2025
கரூர்: அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய Pharmacist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 10, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவுப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2024–25 கல்வியாண்டிற்கான முதல் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற 3 மாத சான்றிதழ் படிப்புக்கான (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17-32 வயதுக்குள் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 15 தேதிக்குள் நேரில் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.