News August 25, 2024
கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கரூர்: வீட்டில் மது விற்ற நபர் அதிரடி கைது!

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜகோகிலா தேவி தலைமையிலான போலீசார் நங்கவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அதில் வீட்டின் அருகே மது விற்ற இனுங்கூர் காசா காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுதாகர் (43) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 18, 2025
கரூர்: வீட்டில் மது விற்ற நபர் அதிரடி கைது!

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜகோகிலா தேவி தலைமையிலான போலீசார் நங்கவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அதில் வீட்டின் அருகே மது விற்ற இனுங்கூர் காசா காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுதாகர் (43) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 18, 2025
அரவக்குறிச்சி அருகே பரபரப்பு!

அரவக்குறிச்சி அருகே தாளப்பட்டி கிராமத்தில் மாரப்பன் (49) மற்றும் அவரது குடும்பம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 1 மணியளவில் நான்கு மர்மநபர்கள் தடி, கடப்பாறை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வனிதா (45) கழுத்தில் இருந்த 5½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொள்ளையர்கள் தப்பினர். புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


