News August 25, 2024

கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

image

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

கரூரில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

கரூர் மாவட்டம் காளியப்பனூர் தரிசு காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தாந்தோணிமலை போலீசார் மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

News December 6, 2025

கரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 6, 2025

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

image

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் ரயில் நிலையத்தில் நேற்று (டிசம்பர் 5) பாதுகாப்புப் படையினரும் இருப்புப்பாதை போலீசாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் காத்திருக்கும் அறைகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தின் பிற முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தினர்.

error: Content is protected !!