News December 30, 2024
கரூரில் அதிமுகவினர் 300 பேர் கூண்டோடு கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனுமதியை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்றது. அப்போது, 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Similar News
News May 7, 2025
கரூர்: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

▶️கரூர் டவுன் – 04324-217100. ▶️வாங்கல் – 04324-228224. ▶️தான்தோணி மலை – 9498203170. ▶️அரவக்குறிச்சி – 04320-230026 ▶️கே.பரமத்தி – 04324-283321. ▶️தென்னிலை – 04320237227. ▶️குளித்தலை – 04323-222094. ▶️நங்கவரம் – 9498167844. ▶️சின்னதாராபுரம் – 04324-232229 ▶️மாயனூர் – 04323-243326. ▶️லாலாபேட்டை -04323-242224. ▶️தோகமலை – 04323-252224. இதை Share பண்ணுங்க.
News May 7, 2025
கரூரில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் வேலை!

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி & கைத்தறி நிறுவனத்தில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். 10ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க <
News May 7, 2025
இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.