News March 21, 2024
கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

நிலக்கோட்டை அருகே நூதலாபுரம் கிராமத்தில் திண்டுக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக அன்றைய தினம் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுகிறது என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
திண்டுக்கல்: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

திண்டுக்கல் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ,டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 6, 2026
திண்டுக்கல்: Spam Calls-க்கு இனி ‘End Card ‘

பிஸியான நேரத்தில் வரும் லோன், கிரெடிட் கார்டு போன்ற தேவையில்லாத ஸ்பேம் (Spam Calls) அழைப்புகளால் பலரும் கடுப்பாகி இருப்பீர்கள்.இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம்.அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 6, 2026
கொடைக்கானலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் மற்றும் பேரிஜம் வனப்பகுதியில் வனத்துறையினரின் உடந்தையுடன் 2,000-க்கும் மேற்பட்ட அந்நிய மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது ஆய்வில் அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் கோட்ட வனப் பாதுகாவலர் அதிரடி நடவடிக்கை எடுத்து, 4 வனத்துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


