News March 5, 2025
கருக்கலைப்பு தடுக்க தனிப்படை: மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் J.U. சந்திரகலா தலைமையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் தெரிவித்தாவது: மாவட்டத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள அரக்கோணம் சோளிங்கர் ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரங்களில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் சிசு கரு கலைப்பு தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Similar News
News November 25, 2025
ராணிப்பேட்டை: கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

வாலாஜாவை அடுத்த அம்மூர் கூட்டு ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், வாலாஜா புலித்தாங்கல் பகுதியில் குட்கா விற்ற சங்கர் (57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 105 பாக்கெட் குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமைந்துள்ள ரிஷஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (நவ.24) நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாற்றிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.


