News March 30, 2024

கருகல் நோய் தாக்குதலால் மல்லிகை பூ விவசாயிகள் வேதனை

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 26, 2025

தேனி மக்களே உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 26, 2025

தேனி: அக்காவின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்

image

பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருக்கும் இவரது மைத்துனர் ஜெயராமன் என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2022.ல் ஜெயராமன், ஜெயபாலனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.25) ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News November 26, 2025

தேனி: கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

image

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் பெருமாயி (70) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2024.ல் மாரிச்செல்வம் மீது பெருமாயி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெருமாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து (நவ.25) தீர்ப்பு.

error: Content is protected !!