News May 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
Similar News
News November 15, 2025
குமரி: மாமியாரை தாக்கிய Ex. ராணுவ வீரர்

மாத்தார் தத்தன் விளையை சேர்ந்தவர் தங்கலெட் (64). இவரது மகளின் கணவர் கொல்வேலைச் சேர்ந்த Ex. ராணுவ வீரர் கிளீட்டஸ் (43). மகளுக்கும் கிளீட்டசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வெளியூரில் உள்ளார். 2 நாட்கள் முன்பு கிளீட்டஸ் மாத்தாரில் தங்கலெட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். காயமடைந்த தங்கலெட் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி. நேற்று திருவட்டார் போலீசார் கிளீட்டசை கைது செய்தனர்.
News November 15, 2025
குமரி:இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News November 15, 2025
குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


