News April 23, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணி – கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க கேட்டு 127 வது நாளாக அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. மாலை மணி – பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைநிறுத்தம் குறித்து நாகர்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
Similar News
News December 19, 2025
ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை தயார்

பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் 5.35 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இவை சென்னையிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கோணத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 804 ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 19, 2025
குமரியில் பைக்குகள் திருடிய கேரள வாலிபர் கைது

கடந்த மாதம் திருவட்டார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பியில் 3 பைக்குகள் திருட்டு போனது. இந்நிலையில் களியக்காவிளையில் போலீசார் ரோந்து சென்றபோது கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த சஜித்கான்(25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவட்டார் பகுதியில் 3 பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 19, 2025
குமரியில் பைக்குகள் திருடிய கேரள வாலிபர் கைது

கடந்த மாதம் திருவட்டார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பியில் 3 பைக்குகள் திருட்டு போனது. இந்நிலையில் களியக்காவிளையில் போலீசார் ரோந்து சென்றபோது கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த சஜித்கான்(25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவட்டார் பகுதியில் 3 பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


