News April 23, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணி – கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க கேட்டு 127 வது நாளாக அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. மாலை மணி – பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைநிறுத்தம் குறித்து நாகர்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
Similar News
News December 2, 2025
குமரி: மாணவி பாலியல் வன்கொடுமை.. டிரைவர் கைது

தக்கலை பகுதியை கல்லூரி மாணவி கடந்த 9ம் தேதி ஆம்னி பேருந்தில் கல்லூரிக்கு கோயம்புத்தூர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் உதவி செய்வது போன்று களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் அனீஷ் (36) என்பவர் மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுக்குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் அனிஷை நேற்று கைது செய்தனர்.
News December 2, 2025
நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் (டிச.2) நாளையும் (டிச.3) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்தில் மற்றம் செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழு போக்குவரத்து மாற்றம் பற்றி அறிய <
News December 1, 2025
குமரி: மீன்பிடி உரிமம் ஏலம் அறிவிப்பு

பேச்சிப்பாறை அணை மீன்பிடி உரிமம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.tntendersgov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் 19494/F3/2024 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


